இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க அடுத்த வருடம் நடைபெற உள்ள பாகிஸ்தான் அணியுடனான சூப்பர் லீக் 20 இற்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 இற்கு 20 ஓவர் உலககிண்ண கிரிக்கட் போட்டி அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் உடல் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், லசித் மாலிங்க பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விலகியுள்ளார் என அவரது முகாமையாளர் தெரிவித்தார்.
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்
Tell us what you're thinking... !