இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை நான்கு வருடங்கள் போட்டித் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த தடையுத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாகவே குசல் ஜனித் பேரேராவிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குசல் ஜனித் பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டு நியூஸிலாந்து தொடரில் இருந்து அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் சிறுநீரை மீண்டும் இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், பீ மாதிரி (B Sample) சோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் படி அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
வீரர் ஒருவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்
Tell us what you're thinking... !